தமிழ் வாழும் மொழியாகத் தொடர்ந்து செழித்தோங்கும்! 🌟
சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் (STTU) 75-ஆம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தார் பிரதமர் லாரன்ஸ் வோங்!
விழாவில் பேசிய அவர், “தமிழ் வாழும் மொழியாகத் தொடர்ந்து செழித்தோங்கும்” என ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார். தாய்மொழி என்பது வெறும் தொடர்புக் கருவி மட்டுமன்றி, நம் பண்பாட்டு வேராகவும் வரலாற்றுப் பிணைப்பாகவும் திகழ்கிறது.
சிங்கப்பூரின் பன்முகத்தன்மையில் நமது கலாச்சார அடையாளத்தைப் பாதுகாக்கும் முதன்மைத் தூணாகத் தாய்மொழிக் கல்வி எப்போதும் விளங்கும் என்பதை இவ்விழா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
📌 மூலம்: தமிழ் முரசு : https://share.google/dhh0e3gBSyMjOKg9B