
sttu.org.sg
sttu.org.sg


2026
சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் 2026-ஆம் ஆண்டு நடவடிக்கைகள்
நம் சங்கத்தின் 75-ஆம் ஆண்டு நிறைவு விழா

அன்புடையீர்,
இவ்வாண்டு நாம் நமது சங்கத்தின் 75-ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடவிருக்கிறோம். இக்கொண்டாட்டம் தமிழாசிரியர்களான நம் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் ஒரு நிகழ்வாகும். அதனையொட்டி 2026 ஜுலை மாதம் 17-ஆம் தேதி விருந்து நிகழ்ச்சி ஒன்றுக்கு நமது சங்கம் ஏற்பாடு செய்திருக்கிறது. நமது சிங்கப்பூரின் பிரதமர், திரு லாரன்ஸ் வாங் அவர்கள் கொண்டாட்ட நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள இசைவு தந்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
நிகழ்ச்சிக்கான விவரங்கள் பின்வருமாறு:
நாள்: வெள்ளிக்கிழமை, 17 ஜுலை 2026
நேரம் : மாலை 5.30 மணிமுதல் 9.30 மணிவரை
இடம் : ஆர்க்கிட் கன்ட்ரி கிளப்
1 Orchid Club Road
Orchid Country Club
Singapore 769162
விருந்தின்போது, நமது சங்கத்தின் வரலாற்று நூலானது சிறப்பு விருந்தினர் அவர்களால் வெளியிடப்படும். அதேவேளையில், இவ்விருந்தினையொட்டி, சங்கம் அற நிறுவனம் ஒன்றிற்கு நன்கொடை திரட்டி வழங்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. நமது கொண்டாட்டம் சமூகத்தின் கொண்டாட்டமாக அமைய அனைவரது அன்பையும் ஆதரவையும் நாடுகின்றோம். கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொள்ள விரைவில் பதிவுசெய்யும் உறுப்பினர்களுக்குக் கட்டணச் சிறப்புச் சலுகையும் உண்டு. வாய்ப்பினை நழுவவிடாதீர்கள். உடனே முன்பதிவு செய்யவும். கூடுதல் விவரங்களுக்கு இணைப்பில் உள்ள படிவத்தைக் காணவும்.
உங்கள் வருகையைப் பின்வரும் இணைப்பின்வழி உறுதிசெய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேல்விவரங்களுக்கு விருந்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களான
- முனைவர் முஹைதீன் (கைப்பேசி எண்: 92475472)
- திருமதி கங்கா (கைப்பேசி எண்: 91467739)
ஆகிய இருவரையும் தொடர்புகொள்ளலாம்.
சிதஆச உறுப்பினர்களுக்கு சங்கத் தலைவரின் கடிதம்.
தமிழவேள் கோ. சாரங்கபாணி நினைவுக் கருத்தரங்கு 2026

இவ்வாண்டிற்கான தமிழ்மொழி விழாவையொட்டி, சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் தமிழவேள் கோ. சாரங்கபாணி நினைவுக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
மகிழ்வூட்டும் கற்பித்தல் என்னும் தலைப்பில் அமைந்துள்ள இக்கருத்தரங்கின் நோக்கம் தமிழாசிரியர்களோடு மகிழ்வூட்டும் கற்பித்தலுக்கான சில உத்திமுறைகளைப் பகிர்ந்துகொள்வதாகும்.
கருத்தரங்கின் சிறப்புப் பேச்சாளர் சொற்பொழிவாளரும் தன்முனைப்புப் பேச்சாளரும் சிறந்த எழுத்தாளரும் திருமதி கவிதா ஜவஹர்.
இக்கருத்தரங்கின்போது, நமது சங்கத்திற்கான 75-ஆவது நிறைவு விழாவிற்கான சிறப்பு சின்னம் வெளியீடு காணவிருக்கிறது என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
கருத்தரங்கு குறித்த விவரங்கள் பின்வருமாறு;
நாள்: 18 ஏப்ரல் 2026 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 6 மணி முதல் 8 மணி வரை
(மாலை 5 மணி முதல் பதிவும் சிற்றுண்டியும்)
இடம்: உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்
கருத்தரங்கிற்குப் பின்வரும் இணைப்பின் மூலம் 14.04.2026-க்குள் பதிவு செய்துகொள்ளவும்.