

sttu.org.sg
sttu.org.sg



2015 சங்க நிகழ்வுகள்
தமிழவேள் நினைவுச் சொற்பொழிவு 2015
வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் நம் சங்கம், 15.04.2015 அன்று தமிழவேள் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தியது. ஜப்பானின் இரிட்சுமேய்க்கான் ஆசிய பசிபிக் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், தென்கிழக்காசிய ஆய்வுக் கழகத்தில் மூத்த ஆய்வாளராகவும் பணியாற்றி வரும் பேராசிரியர் அ. வீரமணி "சிங்கப்பூரில் தமிழும் தமிழர்களும் - கடந்த 50 ஆண்டுகளும் இனிவரும் 50 ஆண்டுகளும்" என்னும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்.


சுமார் 150 ஆசிரியர்கள், கல்வியாளர்கள், சமூகத் தலைவர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் நடந்த கலந்துரையாடலின்போது பலரும் பங்கேற்று தம் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.