சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் தனது 75வது ஆண்டு நிறைவு விழாவிற்கான தயாரிப்பில் இருக்கும் இத்தருணத்தில், தமிழாசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தமிழ் மொழியின் வளர்ச்சியில் அக்கறையுள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது. கல்வி அமைச்சு மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைந்து, தமிழ்மொழிக் கல்வியை மேம்படுத்த சங்கம் உறுதியுடன் செயல்படுகிறது
“75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த தருணத்தில், பெருமையுடன் நமது பயணத்தை நினைவுகூர்ந்து, புதிய உறுதியுடன் முன்னேறுவோம். தமிழாசிரியர்களின் மேம்பாட்டிற்கும் தமிழ்மொழிக் கல்வியின் எதிர்காலத்திற்கும் உத்வேகத்தோடு பாடுபடுவோம். வளமான எதிர்காலத்தை உருவாக்க உத்வேகத்தோடு ஒன்றிணைவோம்.”
தலைவர், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம்