Skip to main content

STTU

மலாக்கா மகிழ்வுலா

அயராது உழைக்கும் சங்க உறுப்பினர்களின் நலனை முன்னிறுத்தி அனைவரும் ஒன்றுகூடி மகிழ்வதற்கும் கற்பதற்கும் மலாக்காவிற்கு மகிழ்வுலா ஒன்றிற்கு சங்கச் செயலவையினர் ஏற்பாடு செய்திருந்தனர். ​ ஆசிரியர் தினத்தின் வார இறுதியைத் தமிழாசிரிய நண்பர்களோடு மகிழ்ச்சியாகக் கொண்டாடவும் நினைவிலிருந்து நீங்கா அனுபவத்தைப் பெறவும் 2025 செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி தொடங்கி 7-ஆம் தேதி வரை சலுகைக் கட்டணத்தில் இப்பயணத்தைச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த மகிழ்வுலாவில்    13  உறுப்பினர்கள் கலந்துகொண்டு 3 நாள்களை மகிழ்ச்சியாகக் கழித்தனர்.